Thursday, August 27, 2020

மலேசியா: ஆலயங்கள் அகற்றப்படும் காரணமும் அதனை மேட்கொள்ளும் வழிமுறையும்.

1.

நமது இனம், மொழி, சமயம் மற்றும் கலாச்சாரம் வளர அடித்தளமாக திகழ்வது ஆலயம்.

2.

ஆனால் இன்று மலேசியாவில் உள்ள அணைத்து ஆலயங்களும்; ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதா?

3.

மலேசியாவில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள்; ஆலயங்களுக்கு சொந்தமான நிலத்தில் அமையவில்லை.

4.

இது ஏனெனில், மலேசியாவில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை மற்றும் சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்டவையாகும்.

5.

தோட்டப்புறங்களில் அமைத்துள்ள பெரும்பாலான பழமை வாய்ந்த ஆலயங்கள் காலனித்துவ காலத்தில் தோட்ட உரிமையாளர்களின் அனுமதியுடன் அமைக்கப்பட்டவையாகும்.

6.

மேம்பாட்டு வளர்ச்சியின் காரணமாக தோட்டங்கள் துண்டாடப்பட்டு உரிமம் பரிமாற்றம் பெரும்பொழுது ஆலயம் அமைத்திருக்கும் நிலங்களின் உரிமம் தனியார் அல்லது அரசு பெயருக்கு பரிமாற்றப்படுகிறது.

7.

மாநில அரசும் மற்றும் தேசிய நிலக் குறியீடு பிரிவு 214A-ன் கீழ் (Section 214A of National Land Code) நிறுவப்பட்ட தோட்ட நில வாரியமும் தோட்ட நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலயங்களைத் தீர்வு காணாமல் தோட்ட நிலங்களின் உரிமம் பரிமாற்றம் செய்ய நில உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

8.

இதுவே, ஆலயங்கள் அகற்றப்படுவதற்கும் அல்லது உடைபடுவதற்கும் முக்கிய காரணம் வகிக்கிறது.

9.

இதை தவிர்த்து சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 பிரிவு 72-இன் கீழ் (Section 72 of Street, Drainage and Building Act 1974) ஊராட்சி அரசின் கட்டிடத் திட்ட அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டிடங்கள் என்ற காரணத்தாலும் ஆலயங்கள் அகற்றப்படுகிறது.

10.

ஆகவே, நடப்பில் இருக்கும் ஆலய நிர்வாகம் தங்கள் ஆலயம் அமைத்திருக்கும் நிலங்களின் உரிமத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும்.

11.

இது குறித்து மாநில அரசின் மூலம் நில உரிமையாளர்களை சந்தித்து சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

12.

ஆலயம் அகற்றப்படுவதை/வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்துவதற்கான ஒரே வழி ஆலய நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

13.

வரும் முன் காப்போம்.                                       

 

எழுத்து:-

அழகேந்திரா ரமணி

திகதி: 27 ஆகஸ்ட் 2020

Wednesday, August 5, 2020

மலேசியா: ஆலய பதிவு என்றால் என்ன?

1.

மலேசியாவில் ஆலய பதிவை நிர்வகிக்க குறிப்பிட்ட நேரடி சட்டம் எதுவும் இல்லை.

2.

மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 11-வது விதியின் கீழ் (Article 11 of Federal Constitution) மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

3.

ஆகவே, மத வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்களின் பதிவுக்கான சட்ட அவசியம் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது வேறெந்த எழுதப்பட்ட சட்டத்திலும் குறிப்பிடவில்லை.

4.

உண்மை என்னவென்றால் மலேசியாவில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை மற்றும் சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்டவையாகும்.

5.

பெரும்பாலான பழமை வாய்ந்த ஆலயங்கள் காலனித்துவ காலத்தில் தோட்ட உரிமையாளர்களின் அனுமதியுடன் அமைக்கப்பட்டவையாகும்.

6.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஆலயங்களின் பதிவு மாநில மாநில அரசாங்கத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

7.

எனவே, ஆலய பதிவுகளை மாநில அரசு தேசிய நிலக் குறியீடு பிரிவு 62-ன் கீழ் (Section 62 of National Land Code) மாநில அரசு குறிப்பிட்ட நிலங்களை பொது வசதிகளுக்கான முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலமாக (இந்து ஆலயங்கள்) சட்டப்பூர்வமாக மலேசியா சங்கப் பதிவாளரால் (ROS) பதிவு பெற்ற இந்து சமய இயக்கங்களின் (Persatuan Penganut) பெயரில் சட்ட அறிவிப்பு (Legal Notification) மூலம் அரசிதழ் (gazette) மட்டுமே செய்யப்படுகிறது.

8.

ஆகையால், ஆலய நிலங்களை சட்ட அறிவிப்பு மூலம் அரசிதழ் செய்வதற்கு தேவைப்படும் முக்கிய விண்ணப்பக் கருவியே மலேசியா சங்கப் பதிவாளரால் பதிவு பெற்ற இந்து சமய இயக்கங்கள்.

எழுத்து:-

            அழகேந்திரா ரமணி

            திகதி: 5 ஆகஸ்ட் 2020